தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்துள்ளது.
தேர்தல் பிரசாரங்களும், கட்சித் தலைவர்களின் பிரசாரங்களும், ஊடகங்கள் வாயிலாக வெளியாகும் குறும்படங்கள், தேர்தல் விளம்பரங்கள் வாயிலாக வாக்குச் சேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறும் பேரவைத்தேர்தலில், எந்தெந்த அரசியல் கட்சி, எந்தெந்த சின்னத்தில் போட்டியிடுகின்றன என்பது குறித்து ஒரு சிறிய விளக்கம் இங்கே..
அதிமுக கூட்டணி கட்சிகளும் அதன் சின்னங்களும்
திமுக கூட்டணி கட்சிகளும் அதன் சின்னங்களும்
மநீம கூட்டணி கட்சிகளும் அதன் சின்னங்களும்
அமமுக கூட்டணி கட்சிகளும் அதன் சின்னங்களும்
இதரக் கட்சிகள்
கட்சிகளும் அதன் சின்னங்களும்
இந்தியாவில் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. அதில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளும், 57 மாநில கட்சிகளும் நிரந்தர சின்னங்களைக் கொண்டிருக்கின்றன. அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தரச் சின்னம் ஒதுக்கப்படுவதில்லை. அந்தக் கட்சிகள் தோ்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் நிற்கும் பட்சத்தில் பொதுச் சின்னம் ஒதுக்கப்படும். இல்லாவிட்டால் சுயேச்சை வேட்பாளா்களாகவே கருதப்படுவா். இதுதான் சின்னம் ஒதுக்கீட்டு நடைமுறையாகும்.