வேளாண் பட்டதாரிகளுக்கு அதிகாரி பணி

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்.) மற்றும் அதன் கல்வி மையங்களில்
Updated on
1 min read

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்.) மற்றும் அதன் கல்வி மையங்களில் ஏற்படும் ஆராய்ச்சியாளர் பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக வேளாண் ஆராய்ச்சியாளர் தேர்வு வாரியம் (ஏ.எஸ்.ஆர்.பி.) செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு, பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் வேளாண் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் கல்வி மையங்களில் காலியாக உள்ள இணை இயக்குநர், இயக்குநர், திட்ட ஒருங்கிணைப்பாளர், எச்.ஓ.டி. போன்ற அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேளாண் அறிவியல், உயிரியல், மரபியல், உயிரி தொழில்நுட்பம், வனவியல், தோட்டக் கலைத்துறை, சுற்றுச் சூழலியல், நீரியல், கால்நடை அறிவியல் போன்ற அறிவியல் பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கும் பொருளாதாரம், புள்ளியியல் பாடங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக்கட்டணமாக ரூ.500-ஐ டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.08.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com