கிருஷ்ணகிரி மாவட்ட நீதித்துறையில் வேலை: 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட நீதித்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
கிருஷ்ணகிரி மாவட்ட நீதித்துறையில் வேலை: 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட நீதித்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு III - 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: கணினி இயக்குநர் - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
தகுதி: கணினி அறிவியல் துறையில் பட்டம் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: தட்டச்சர் - 22
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பணி: இளநிலை உதவியாளர் - 11
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி


பணி: அலுவலக உதவியாளர் - 07
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300

பணி: இரவு காவலர் - 04
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: தமிழில் எழுத் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: மசால்சி - 14
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: இரவு காவலர் மற்றும் மசால்ஜி - 01
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: துப்புரவு பணியாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: ஓட்டுநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: நகல் எடுப்பவர் - 02
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,650
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. நகல் எடுப்பதில் குறைந்டபட்சம் 6 மாத காலம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.06.2017


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
இராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி 635 001.


மேலும், அனைத்து தகவல் பரிமாற்றங்களும், தேர்வு நேர்காணலுக்கான அழைப்பு http://www.ecourts.gov.in/krishnagri/recruitment என்ற இணையதளத்தின் வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com