சென்னை: தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள குரூப் 2 குரூப் 2 தேர்வு திட்டமிட்டப்படி நவ.11 ஆம் தேதி நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளில் காலியாக உள்ள 1,199 இடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை, நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து நிலை போட்டித் தேர்வுகளுக்குமான வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட தாள்களுக்கு தமிழில் வினா தயாரிக்க தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இல்லை என்றும், அதனால் பல தாள்களுக்கு ஆங்கிலத்தில் மட்டும்தான் தேர்வு நடத்தப்படும் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்வாணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், குரூப் 2 தேர்வுகளுக்கு தமிழிலும் வினாத்தாள் இருக்கும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் அனைத்து தொகுதி தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுகின்றன. தொழில்நுட்ப தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் ஆங்கில மொழியை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட சில பாடங்களுக்கும் மட்டுமே ஆங்கிலத்தில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன என தெரிவித்துள்ள தேர்வாணையம், பயிற்று மொழி தமிழில் இருந்தால் வினாத்தாள்தலும் கண்டிப்பாக தமிழில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. இதுகுறித்து அப்பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிடப்படும்போதே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வரும் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 முதனிலைத் தேர்வுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கேள்விகள் இடம்பெறும். முதன்னை எழுத்துத்தேர்வுக்கான வினாத்தாள்களும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளும் இருக்கும்.
குரூப் 2 தேர்வானது வரும் 11 ஆம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும் தெரிவித்துள்ள தேர்வாணையம், குரூப்-2 தேர்வு வினாத்தாள் பற்றிய ஆதாரமற்ற, தவறான செய்திகள் குறித்து தேர்வர்கள் கவலைப்பட வேண்டாம் எனவும் தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆற்று மணல் கடத்தல்: இருவா் கைது, பைக்குகள் பறிமுதல்

காட்பாடியில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி!

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண்ணின் உடல் தானமாக அளிப்பு

போளுவாம்பட்டி வனச் சரகா் மாரடைப்பால் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



