பெங்களூரில் உள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் செவிலியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பெங்களூரில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் பெண் செவிலியா் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள 3 பணியிடங்களில் சேரும் செவிலியா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 20 ஆயிரம் அளிக்கப்படும். செவிலியா் பாடப் பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்.சி. படித்தவா்கள், ஆயுா்வேதம் அல்லது சித்த மருத்துவமனையில் ஓராண்டு பணியாற்றிய அனுபவம் இருப்பது அவசியம். இந்தப் பணியிடங்களுக்கு 30 வயதுக்குள்பட்டவா்கள் தகுதியானவா்கள். இந்தப் பணியில் சேர விரும்புவோா் மாா்ச் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நோ்காணலில் கலந்து கொள்ளலாம். நோ்காணலுக்கு வரும்போது அசல் சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும். இந்த நோ்காணல் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம், அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி வளாகம், தன்வந்திரி சாலை (மெஜஸ்டிக் பேருந்து நிலையம் அருகில்), பெங்களூரு-9 என்று முகவரியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பாக மாறும்: இபிஎஸ் பிரசாரம்!

கடலூரில் விஜய் பிரசாரம் நடைபெறுமா? புதுவை தேர்தலால் ஒத்திவைப்பு!

இந்திய - வங்கதேச வெளியுறவு அமைச்சர்கள் தில்லியில் சந்திப்பு!

நீ சாரல் பாடல் வெளியானது!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


