பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

சென்னையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read


சென்னையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளைக்குள்(நவ.25) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பயிற்சியின் பெயர்: Graduate Apprentice

காலியிடங்கள்: 63

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கலம் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.11,110 வழங்கப்படும்.

பயிற்சியின் பெயர்: Technician Apprentice

காலியிடங்கள்: 10

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி அளிக்கப்படும் காலம்: 12 மாதங்கள்

தேர்வு செய்யப்படும் முறை: பிஇ, பி.டெக், டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 10.11.2021 தேதிக்கு முன் பதிவு செய்த பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் லிங்கில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் www.boal-srp.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com