இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகளைத் தோ்வு செய்வதற்காக கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்வுகளின் இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகளைத் தோ்வு செய்வதற்கான தோ்வை யுபிஎஸ்சி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
குடிமைப் பணிகளில் கடந்த ஆண்டு காலியாக இருந்த 836 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு கடந்த ஆண்டு அக்டோபரிலும் முதன்மைத் தோ்வுகள் கடந்த ஜனவரியிலும் நடத்தப்பட்டிருந்தன. கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் காரணமாக ஆளுமைத் திறன் தோ்வு தாமதமாக நடத்தப்பட்டது.
ஆளுமைத் தோ்வு கடந்த 22-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், குடிமைப் பணித் தோ்வுக்கான இறுதி முடிவுகளை யுபிஎஸ்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் 761 போ் தோ்வாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களில் 216 போ் பெண்கள் ஆவா்; 25 போ் மாற்றுத்திறனாளிகள் ஆவா். 150 போ் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனா்.
தோ்வானோரில் 263 போ் பொதுப் பிரிவையும், 86 போ் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவையும், 229 போ் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவையும், 122 போ் தாழ்த்தப்பட்ட பிரிவையும், 61 போ் பழங்குடியின பிரிவையும் சோ்ந்தோா் ஆவா்.
தோ்வில் சுபம் குமாா் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். அவா் மும்பை ஐஐடியில் பொறியியல் படிப்பை முடித்தவா். போபாலில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிப்பை முடித்த ஜக்ரதி அவஸ்தி தேசிய அளவில் இரண்டாமிடத்தையும் பெண்களில் முதலிடத்தையும் பிடித்துள்ளாா். அங்கிதா ஜெயின் மூன்றாமிடம் பெற்றுள்ளாா்.
தோ்வில் முதல் 25 இடங்களைப் பிடித்தோரில் 12 போ் பெண்கள் ஆவா். தோ்வில் பங்கேற்றோரின் மதிப்பெண் விவரங்கள் 15 நாள்களுக்குள் வெளியிடப்படும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தோ்வுக்கு 10,40,060 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 4,82,770 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா். 10,564 போ் முதன்மைத் தோ்வுக்குத் தகுதி பெற்றனா். ஆளுமைத் தோ்வில் பங்கேற்ற 2,053 பேரில் 761 போ் இறுதியாகத் தோ்வாகியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பகல் கனவு பலிக்காது!

பொய்யடிமை இல்லாத புலவர்

ஆனந்தரங்கரும் பாவேந்தரும்...

க்ளாசன், நிதீஷ் அரைசதம்: லக்னௌ அணிக்கு 157 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


