டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இஎஸ்ஐசி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் கிளார்க், எம்டிஎஸ் வேலைகள்: விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இஎஸ்ஐசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 3847 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 11:41 am

தினமணி


மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இஎஸ்ஐசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 3847 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 3847 (தமிழ்நாட்டிற்கு 385) 

பணி: Upper Division Clerk
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
 
பணி:
Stenographer
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் விகிதம் 10 நிமிடத்தில் சுருக்கொழுத்தில் எழுதி அதை 50 நிமிடங்களில் விரிவாக தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

பணி: Multitasking Staff
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: இஎஸ்ஐசி நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, கணினி திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். சுருக்கெழுத்தர் பணிக்கு எழுத்துத் திறன் தேர்வு மற்றும் தட்டச்சு திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிபிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.250. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 115.02.2022

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | ரூ.1 லட்சம் சம்பளத்தில் யுஜிசியில் வேலை வேண்டுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.