நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

நாகப்பட்டினம் மாவட்டம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


நாகப்பட்டினம் மாவட்டம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் விவரங்கள்: 

பணி: அலுவலக உதவியாளர் - 02

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி, 18 முதல் 34க்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்ப உறையின் மீது "வேலை வாய்ப்பு விண்ணப்பம் - அலுவலக உதவியாளர்" என்று குறிப்பிட வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.nagapattinam.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
 
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், 543, பப்ளிக் ஆபீஸ் ரோடு, வெளிப்பாளையம், நாகப்பட்டினம். 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.03.2022

மேலும் விவரங்கள் அறிய www.nagapattinam.nic.in அல்லது https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2022/03/2022031833.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com