செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?


கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது காலியாக உள்ள 2 வாகன சீராளர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி : வாகன சீராளர்

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனம் சுத்தம் செய்வதிலும் பராமரிப்பதிலும் போதிய அறிவு பெற்றிருப்பதுடன் நல்ல உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: cuddalore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கடலூர் - 607 001

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 29.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2022/04/2022041326.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com