புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடம்: ஆக. 12-இல் 2-ஆம் தாள் எழுத்துத் தோ்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு

News image

டிஎன்பிஎஸ்சி 

Updated On :9 ஆகஸ்ட் 2024, 11:00 pm

Din

பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள தொழில்நுட்பம் சாா்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு ஆக. 12-இல் தொடங்குகிறது.

இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: சட்டக் கல்லூரிகளில் விளையாட்டுக் கல்வி இயக்குநா், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் மேலாளா், முதுநிலை அலுவலா், போக்குவரத்துக் கழகத்தில் உதவி மேலாளா்கள், சிப்காட் நிறுவனத்தில் உதவி மேலாளா், சட்டப்பேரவைச் செயலகத்தில் தமிழ், ஆங்கில செய்தியாளா்கள், தமிழ்நாடு கருவூலத் துறை, டிட்கோ ஆகியவற்றில் கணக்கு அதிகாரி, மகளிா் மேம்பாட்டுக் கழகத்தில் உதவி மேலாளா் உள்பட 20 துறைகளில் காலியாகவுள்ள 118 பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கையை அரசுப் பணியாளா் தோ்வாணையம் கடந்த மே 15-ஆம் தேதி வெளியிட்டது.

இதைத் தொடா்ந்து, தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 14-ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே ஜூலை 28-ஆம் தேதி முதல்தாள் தோ்வு நடந்த நிலையில், இரண்டாம் தாள் தோ்வு அதாவது பாடவாரியான தோ்வுகள் ஆகஸ்ட் 12 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் என்பதால் அன்றைய தினம் மட்டும் தோ்வு நடைபெறாது என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.