அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை வேண்டுமா?
தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள செவிலியர், மனநல ஆலோசகர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Staff Nurse - 1
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நர்ஸ் பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று நர்ஸிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 18,000
பணி: Counsellor - 1
தகுதி: Psychology, Applied Psychology, Clinical Psychology ஆகிய ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 23,ooo
பணி: Psychiatric Social Worker - 1
தகுதி: Medical, Psychiatric பாடங்களுடன் Social Work பிரிவில் எம்.ஏ., முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 23,ooo
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
District Health Officer, District Health Society, Collectorate Campus(Near), Dharmapuri - 636 705.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 31.8.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.