புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஓஎம்ஆர் முறையிலேயே குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு!

கணினி வழியில் நடத்த இருந்த குரூப் 2ஏ முதன்மைத் தேர்வை ஓஎம்ஆர் முறையிலேயே நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :20 டிசம்பர் 2024, 6:32 am

DIN

கணினி வழியில் நடத்த இருந்த குரூப் 2ஏ முதன்மைத் தேர்வை ஓஎம்ஆர் முறையிலேயே நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,540 குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த செப்டமர் 14 ஆம் தேதி நடத்தப்பட்டது.

இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 7,93,966 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.83,467 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியானது.

முதன்மைத் தேர்வு

முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், குரூப் 2 மற்றும் பணிகளுக்கு தனி முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும். இதில், குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டது. முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது பேப்பர், பேனா முறையில் நடத்தப்படும். கொள்குறி வகை கேள்விகள் கொண்ட இரண்டாம் தாள் கணினி வழித்தேர்வாக நடத்தப்படும் என தேர்வாணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அண்மையில், கணினி வழியில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை. இதையடுத்து தேர்வர்களின் கோரிக்கையினை முறையாக பரிசீலநை செய்து, அதனை ஏற்று மேற்கண்ட பதவிக்காக டிச.14 ஆம் தேதி பிற்பகல் நடைபெற்ற கணினிவழித் தேர்வினை தேர்வாணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் ஏற்கனவே இந்த தேர்விற்காக தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கான மறுத்தேர்வு டிச.22 ஆம் தேதி ஒளிக்குறி உணரி(ஓஎம்ஆர்) முறையில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அண்மையில், கணினி வழியில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் தேர்வு ரத்தான நிலையில், குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், தேர்வினை

ஒளிக்குறி உணரி(ஓஎம்ஆர்) முறையிலேயே நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

பாடத்திட்டம் மாற்றியமைப்பு

மேலும், தேர்வர்களின் நலன் கருதியும் அரசுத் துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்‌)-க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்‌ தேர்வு-IV (தொகுதி IV பணிகள்‌)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டு https://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/english/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.