கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

எஸ்பிஐ வங்கியில் பிரொபேஷனரி அதிகாரி வேலை: காலியிடங்கள் 600!

பாரத ஸ்டேட் வங்கியில் 600 தகுதிகாண் பருவ(பிரொபேஷனரி) அதிகாரியாக நியமனத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கியின் மத்திய பணியமர்த்தும் மற்றும் உயர்வுத் துறை கார்ப்பரேட் மையம்

News image

பாரத ஸ்டேட் வங்கி

Updated On :1 ஜனவரி 2025, 2:44 am

DIN

பாரத ஸ்டேட் வங்கியில் 600 தகுதிகாண் பருவ(பிரொபேஷனரி) அதிகாரியாக நியமனத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கியின் மத்திய பணியமர்த்தம் மற்றும் உயர்வுத் துறை கார்ப்பரேட் மையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.CRPD/PO/2024-25/22

பதவி: Probationary Officers (PO)

காலியிடங்கள்: 600

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.4.2024 தேதியின்படி 20 வயதிற்கு மேல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ. 48.480 - 85,920

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு வினாத்தாள் ஆங்கிலம், தமிழ் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும்.

தேர்வு மையம்: முதல்நிலைத் தேர்வு சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய மையங்களில் நடைபெறும்.

முதன்மைத் தேர்வு சென்னை, மதுரை, திருநெல்வேலியில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://sbi.com.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.1.2025

மேலும் விவரங்கள் அறிய https://bank.sbi/web/csreers/current-openings என்ற வங்கி வலைதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.