கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை வேண்டுமா? : உடனே விண்ணப்பிக்கவும்!

சிஎஸ்ஐஆரின் கீழ் செயல்பட்டு வரும் உலோகவியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

CSIR

Updated On :30 மே 2025, 4:37 am

DIN

சிஎஸ்ஐஆரின் கீழ் செயல்பட்டு வரும் உலோகவியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 02/2025

பணி: Junior Stenographer

காலியிடங்கள்: 8

சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நல்ல திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Secretariat Assistant (G) - 5

பணி: Junior Secretariat Assistant (F&A) - 4

பணி: Junior Secretariat Assistant (S&P)- 4

சம்பளம்: மாதம் ரூ. 19,900 - 63,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சுத் தேர்வு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தட்டச்சு திறன் தேர்வில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என தட்டச்சு செய்யும் திறன் மற்றும் சுருக்கெழுத்தர் திறன் தேர்வில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://nml.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.5.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.