மத்திய அரசின்கீழ் செயல்படும் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.: 1/FRI/GC/2026, Date: 04/05/2026
பணி: Library Information Assistant
காலியிடங்கள்: 2
வயது வரம்பு: 18-லிருந்து 27-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நூலக அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Field,Lab Research)
காலியிடங்கள்: 4
வயது வரம்பு: 21-லிருந்து 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தாவரவியல், விலங்கியல், வனவியல், சுற்றுச்சூழல், சூழலியல், உயிரித்தொழில்நுட்பவியல், மரபியல், நுண்ணுயிரியல், நிலவியல், உயிர்வேதியியல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Stenographer Grade II
காலியிடங்கள்: 2
வயது வரம்பு: 18-லிருந்து 27-க்குள் இருக்க வேண்டும்.
தகுரி : +2 தேர்ச்சியுடன் இந்தி அல்லது ஆங்கில சுருக்கெழுத்தல் நிமிடத்திறகு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் எழுதி, அதை கணினியில் விரிவாக தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: Technician(Field,Lab Research)
காலியிடங்கள்: 11
வயது வரம்பு: 18-லிருந்து30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Store Keeper
காலியிடங்கள் : 3
வயது வரம்பு: 18-லிருந்து 27-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician (Maintenance)
காலியிடங்கள் : 9
வயது வரம்பு : 18- லிருந்து 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 8
வயது வரம்பு: 18-லிருந்து 27-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: Forest Guard
காலியிடங்கள்: 7
வயது வரம்பு: 18-லிருந்து 27-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Multi Tasking Staff
காலியிடங்கள்: 45
வயது வரம்பு: 18-லிருந்து27-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு , திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.1,500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர்களுக்கு ரூ.700. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.fri.icfre.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.6.2026
விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Online Applications are invited from Indian nationals for the following posts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










