ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

குரூப் சி பணி: முன்னாள் படை வீரர்கள் கவனத்துக்கு...

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், குரூப் சி பணிகளுக்கு விண்ணப்பிக்க வரைமுறைகள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :29 மார்ச் 2018, 6:00 am

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், குரூப் சி பணிகளுக்கு விண்ணப்பிக்க வரைமுறைகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 10-ஆம் வகுப்பு அல்லது மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன், ராணுவப் பணியில் 15 ஆண்டுகள் முடித்து, ஆர்மி ஸ்பெஷல் சர்டிபிகேட் அல்லது கடற்படையிலோ, விமானப் படையிலோ கரஸ்பாண்டிங் சான்றிதழ் பெற்ற முன்னாள் படைவீரர்கள், பட்டப்படிப்பு தகுதிக்கு நிகரான ரிசர்வ்டு காலியிட குரூப் சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி படைத்தவர்கள் என தமிழக அரசால் ஜன.23-இல் அரசாணை வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், இத்தகைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திருவாரூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04366-220210 தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.