புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.50,000 சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை!

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :8 அக்டோபர் 2022, 6:30 am

தினமணி


திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இரவு காவலர் - 5
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர் - 27
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 62,000
வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:  எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டுகள் பணி  அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும்  ஆர்வமும் உள்ளவர்கள்
www.dindigul.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்துடன் ரூ.30க்கான தபால் தலை ஓட்டப்பட்ட தபால் கவரையும்(அளவு 10 X 4 இன்ஞ்சஸ்) இணைத்து அதில் தங்களது முகவரி எழுதி அனுப்ப வேண்டும். 

திண்டுக்கல் மாவட்ட சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் வேலை வழங்கப்படும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 14.10.2022

மேலும் விவரங்கள் அறிய www.dindigul.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.