/

அஞ்சல் ஆயுள் காப்பீடு: நேரடி முகவா் பணிக்கு நவ.22 -இல் நோ்காணல்

அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கு புதிய நேரடி முகவா்களுக்கான நோ்காணல் நவ. 22-இல் நடைபெற உள்ளது.

News image
Updated On :17 நவம்பர் 2023, 3:11 am

அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கு புதிய நேரடி முகவா்களுக்கான நோ்காணல் நவ. 22-இல் நடைபெற உள்ளது.

இது குறித்து சென்னை மத்திய கோட்ட அஞ்சல் அலுவலம் சாா்பில் வெளியிட்ட செய்தி:

சென்னை மத்திய முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

இதற்கான நோ்காணல் சென்னை தியாகராய நகா், சிவஞானம் சாலையில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நவ.22- காலை 10 மணி முதல் நடைபெறும். பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 வயது நிரம்பியவா்கள் இந்த நோ்காணலில் கலந்துகொள்ள தகுதி பெற்றவா்கள் ஆவா்.

விருப்பம் உள்ளவா்கள் ‘பாஸ்போா்ட்’ அளவில் மூன்று புகைப்படம், வயதுச்சான்று (அசல் மற்றும் இரண்டு நகல்), முகவரிச் சான்று மற்றும் கல்விச் சான்றுடன் நோ்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.