தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) தேர்வு செய்து வருகிறது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் அறிவிக்கப்படாமல் உள்ள குரூப் 1, குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என அரசு தேர்வுக்காக தயாராகி வருபவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அந்த வகையில் நடப்பு ஆண்டில் மீதமுள்ள குரூப் 1 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் மாதம் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு முறை குரூப் 4 தோ்வு நடைபெறும் போதும் சில ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு பல லட்சக்கணக்கானவா்கள் போட்டித் தோ்வை எழுதி வரும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 காலி பணியிடங்களை தற்போது உள்ள சூழ்நிலைக்கு தக்கபடி அதிகரித்து அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கானவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடவும் காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதற்கு தோ்வில் வெற்றி பெற்றவா்களை ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ரிசா்வ் செய்து வைத்து உடனுக்குடன் காலிப்பணியிடம் உருவாகிய உடனே அதை நிரப்புவதற்கு உண்டான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவும் அரசு முன்வரவேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
அந்த வகையில் குரூப் 4 பதவிக்கான காலியிடங்கள் எவ்வளவு என்பது உறுதியாத நிலையில், லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பும் வரும் நவம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான எழுத்துத் தேர்வு 2024 ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என தெரிகிறது.
மேலும் இந்த மாதத்தில் 384 ஒருங்கிணைந்த பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கும், அக்டோபர் மாதம் 400 தொழில்நுட்ப காலிப்பணியிடங்கள் என 13 வகையான துறைசார்ந்த காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுகளுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



