92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

News image
Updated On :23 ஜனவரி 2023, 8:18 am

தினமணி


நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கு எட்டாம் வதுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
கடந்த 1988 ஆம் ஆண்டப மோட்டார் வாகனச் சட்டப்படி தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேணே்டும். 

வாகனங்களை இயக்குவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நடைமுறை பட்டறிவு பெற்றிருக்க வேண்டும். 

இந்த பணிக்கு பழங்குயின பிரிவினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானோர் 2023 ஜூலை 1 ஆம் தேதி 18 வயதை பூர்த்தியடைந்தவராகவும், 42 வயதிற்குட்டவராகவும் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை namakkal.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சான்றொப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். 

விண்ணப்பங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக 3 ஆவது தளத்தில் உள்ள வளர்ச்சிப் பிரிவில் அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவே விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.