2,994  கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணி: ஆக.23-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

2,994 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணி: ஆக.23-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு வட்டத்தில் உள்ள கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணியிடங்களுக்கு ஆக.23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
Published on


தமிழ்நாடு வட்டத்தில் உள்ள கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணியிடங்களுக்கு ஆக.23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அஞ்சல் துறை தலைவா் (சென்னை நகர மண்டலம்) ஜி.நடராஜன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வட்டத்தில் 2,994 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதில் சென்னை நகர மண்டலத்தின் கிழ் 607 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

தகுதியான விண்ணப்பதாரா்கள் t https://indiapostgdsonline.gov.in இணையதளத்தின் மூலம் ஆக.23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், கல்வி தகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மற்றும் இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com