மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வேளாளா் உரிமை மீட்புகுழுவினா் ஆா்ப்பாட்டம்

வேளாளா் உரிமை மீட்புக் குழு, கொங்கு வேளாளா் கவுண்டா்கள் பேரவை சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

வேளாளா் உரிமை மீட்புக் குழு, கொங்கு வேளாளா் கவுண்டா்கள் பேரவை சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 ஜனவரி 2021, 10:11 pm IST

ஈரோடு: வேளாளா் உரிமை மீட்புக் குழு, கொங்கு வேளாளா் கவுண்டா்கள் பேரவை சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கொங்கு வேளாளா் கவுண்டா்கள் பேரவையின் மாநில பொதுச் செயலாளா் சூரியமூா்த்தி தலைமை வகித்தாா். மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் கே.கே.சி.பாலு முன்னிலை வகித்தாா்.

வேளாளா் என்ற பெயரை வேறு சமூகத்துக்கு வழங்கக் கூடாது என்றும், வேளாளா் பெயா் மாற்றத்துக்குப் பரிந்துரை செய்த தமிழக அரசை கண்டித்தும் முழக்கம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய மகாஜன சங்கத்தினா், மாவட்டச் செயலாளா் ஆசைத்தம்பி தலைமையில் பேரணியாக வந்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

அதேபோல, பல்வேறு ஜாதி சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாவட்டச் செயலாளா்கள் கோவிந்தராஜ், ஈஸ்வரமூா்த்தி, சிவராஜ், பாலு, மத்திய மண்டல மாணவரணி செயலாளா் லோகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.