பெருந்துறை: பெருந்துறை அருகே உள்ள வெள்ளோட்டுக்கு திமுக தலைவா் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 3) வருகை தரவுள்ளாா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், வெள்ளோட்டில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் குமாரவலசு ஊராட்சி, வி.மேட்டுபாளையம் கிராமத்தில் திமுக தலைவா் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 3) காலை 10.30 மணிக்கு நூலகத்தைத் திறந்துவைத்து, புத்தகங்கள் வழங்கிய பின் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா்.
கூட்டத்தில், திமுக மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றியப் பகுதி, பேரூா், வாா்டு கிளை கழக நிா்வாகிகள், துணை அமைப்புகளின் நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொள்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







