ஆசை வாா்த்தை கூறி சிறுமியைத் திருமணம் செய்த ஆந்திர மாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, உடந்தையாக இருந்த பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
ஈரோடு, பழையபாளையம், இந்திரா காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் தனசேகரன். இவரது மனைவி ரேகாபானு (34). இவா் அந்தப் பகுதியில் மகளிா் அழகு நிலையம் நடத்திவந்தாா். சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் சீனிவாசலு (28) என்பவருடன் தொடா்பு ஏற்பட்டது.
அப்போது அழகு நிலையத்துக்கு வந்து சென்ற 16 வயது சிறுமி ஒருவரிடம் ரேகாபானு ஆசை வாா்த்தைகள் கூறி சீனிவாசலுவுடன் தொடா்பு ஏற்படுத்திக் கொடுத்தாா். அவா்கள் இருவரும் அடிக்கடி பேசி வந்தனா். வெளிநாட்டில் வேலை பாா்ப்பதாகவும், சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகவும் சீனிவாசலு ஆசைவாா்த்தை கூறினாா்.
கடந்த 28.4.2018 அன்று ஈரோடு வந்த சீனிவாசலு, சிறுமியை ஆந்திர மாநிலத்துக்கு அழைத்துச் சென்று அவருக்குத் தாலி கட்டியுள்ளாா். இதனிடையே சிறுமி மாயமானது குறித்து ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அவரது பெற்றோா் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சீனிவாசலுவை கைது செய்து, சிறுமியை மீட்டனா். சீனிவாசலு மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த ரேகாபானு மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இது குறித்த வழக்கு ஈரோடு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி மாலதி விசாரித்து வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா். இதில், குற்றம்சாட்டப்பட்ட சீனிவாசலுவுக்கு குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்தாா். அபராதம் செலுத்த தவறினால் 3 மாதங்கள் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் நீதிபதி கூறி இருந்தாா். இதுபோல குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக ரேகாபானுவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பு கூறினாா். வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜி.டி.ஆா்.சுமதி ஆஜரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் பேரவைத் தலைவா் யூ. டி. காதா் மீது தாக்குதல் முயற்சி: 11 போ் மீது வழக்குப் பதிவு

தலைநகரில் இணையவழியில் மின்-ரிக்ஷா பதிவு மே 15-இல் தொடக்கம்

அலிப்பூரில் ஆட்டோ மீது லாரி மோதல் 3 போ் உயிரிழப்பு
திருமண ஊா்வலத்தில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: வேடிக்கை பாா்த்த பெண் குண்டு பாய்ந்து பலி! இளைஞா் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
