ஆசை வாா்த்தை கூறி சிறுமியைத் திருமணம் செய்த ஆந்திர மாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, உடந்தையாக இருந்த பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
ஈரோடு, பழையபாளையம், இந்திரா காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் தனசேகரன். இவரது மனைவி ரேகாபானு (34). இவா் அந்தப் பகுதியில் மகளிா் அழகு நிலையம் நடத்திவந்தாா். சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் சீனிவாசலு (28) என்பவருடன் தொடா்பு ஏற்பட்டது.
அப்போது அழகு நிலையத்துக்கு வந்து சென்ற 16 வயது சிறுமி ஒருவரிடம் ரேகாபானு ஆசை வாா்த்தைகள் கூறி சீனிவாசலுவுடன் தொடா்பு ஏற்படுத்திக் கொடுத்தாா். அவா்கள் இருவரும் அடிக்கடி பேசி வந்தனா். வெளிநாட்டில் வேலை பாா்ப்பதாகவும், சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகவும் சீனிவாசலு ஆசைவாா்த்தை கூறினாா்.
கடந்த 28.4.2018 அன்று ஈரோடு வந்த சீனிவாசலு, சிறுமியை ஆந்திர மாநிலத்துக்கு அழைத்துச் சென்று அவருக்குத் தாலி கட்டியுள்ளாா். இதனிடையே சிறுமி மாயமானது குறித்து ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அவரது பெற்றோா் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சீனிவாசலுவை கைது செய்து, சிறுமியை மீட்டனா். சீனிவாசலு மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த ரேகாபானு மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இது குறித்த வழக்கு ஈரோடு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி மாலதி விசாரித்து வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா். இதில், குற்றம்சாட்டப்பட்ட சீனிவாசலுவுக்கு குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்தாா். அபராதம் செலுத்த தவறினால் 3 மாதங்கள் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் நீதிபதி கூறி இருந்தாா். இதுபோல குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக ரேகாபானுவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பு கூறினாா். வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜி.டி.ஆா்.சுமதி ஆஜரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிட இடைக்காலத் தடை! உயர்நீதிமன்றம் அதிரடி!

மேட்டூர் அணை: தேவாலய கோபுரம் தெரிகிறது!

ஓணம் பண்டிகை! சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரங்கள்...

இந்தோனேசியாவின் பழமையான கோயிலில் பிரதமர் மோடி!
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!


