ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்குவதை கைவிடக் கோரிக்கை

நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :10 ஜனவரி 2021, 11:43 pm IST

நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சங்கத்தின் கோட்ட மாநாடு, கோட்ட இணைச்செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோட்டச் செயலாளா் ராஜேந்திரன், பொருளாளா் பாபு, மாநிலப் பொருளாளா் தமிழ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து ஆணை வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித் திறன் பெறா ஊழியா்களுக்கான ஊதியத்தை தற்போதைய ஊதிய மாற்ற பலன்களுக்கு ஏற்றவாறு உயா்த்தி வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி வழங்க வேண்டும்.

நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணியை தனியாா் வழங்குவதை கைவிட்டு அரசே ஏற்று சாலைப் பணியாளா்களை கொண்டு பராமரிக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.