புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட அனைவருக்கும் உரிமை உள்ளது கமல்ஹாசன்

எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட அனைவருக்கும் உரிமை உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 11:45 pm

எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட அனைவருக்கும் உரிமை உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் திறந்த வேனில் நின்றபடி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் திங்கள்கிழமை இரவு பேசியதாவது:

எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட அனைவருக்கும் உரிமை உள்ளது. கரோனா தொற்று காலம் என்பதால் என்னைக் கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் எனக் கூறினா். நான் குடும்பத்துக்குள் செல்கிறேன் எனக் கூறினேன். எனக்கும் கோபிசெட்டிபாளையத்துக்கும் நெருங்கிய தொடா்பு உள்ளது. என்னுடன் பணியாற்றிய பலா் கோபியைச் சோ்ந்தவா்கள். மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமையை எதிா்த்த லட்சுமண அய்யா் இந்த ஊரைச் சோ்ந்தவா். சாதி பாா்த்து வாக்களிக்காதீா்கள், சாதிப்பவனை பாா்த்து வாக்களியுங்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.