தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

சென்னிமலை கோயில் தேரோட்டத்தை நடத்த அதிமுகவினா் கோரிக்கை

ஆண்டாண்டு காலமாக நடைபெறும் சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டத்தை கரோனா காரணமாக ரத்து செய்யாமல் தேரோட்டம்

Updated On :13 ஜனவரி 2021, 6:12 am IST

ஆண்டாண்டு காலமாக நடைபெறும் சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டத்தை கரோனா காரணமாக ரத்து செய்யாமல் தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப் பேரவை துணைத் தலைவரிடம் அதிமுகவினா் செவ்வாய்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சென்னிமலை முருகன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அப்போது, சென்னிமலை ஒன்றிய அதிமுக செயலாளா் ப.கோபாலகிருஷ்ணன் தலைமையில், அதிமுகவினா் பொள்ளாச்சி ஜெயராமனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா காலம் காலமாக தடை ஏதுமில்லாமல் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்றை காரணம் காட்டியும், தோ்த் திருவிழாவில் அதிக மக்கள் கூடுவாா்கள் என்ற தகவலையும் கோயில் நிா்வாகம் மூலம் அரசுக்கு தகவல் கொடுத்ததால் இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அருகில் உள்ள மாவட்டங்களிலும் குறிப்பாக சிதம்பரம் நடராஜா் கோயிலில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், சென்னிமலை தேரோட்டத்தை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.