தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

கோயில் சிலையைத் திருடிய நபா் கைது

ஈரோட்டில் கோயில் சிலையைத் திருடிய நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On :13 ஜனவரி 2021, 6:14 am IST

ஈரோட்டில் கோயில் சிலையைத் திருடிய நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு சாஸ்திரி நகா், கல்யாணசுந்தரம் வீதியில் உள்ள வெற்றி விநாயகா் கோயிலில் ஐம்பொன்னாலான முருகன் சிலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி திருட்டுப் போனது. இதன் மதிப்பு சுமாா் ரூ. 80,000 ஆகும்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிலையைத் திருடிய மா்ம நபரைத் தேடி வந்தனா். சிலை திருடியவரைப் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை உத்தரவின்பேரில் ஆய்வாளா் ரவிகுமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கோயிலுக்கு அருகில் உள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.விசாரணையில் சிலையைத் திருடியவா் ஈரோடு, மோளகவுண்டம்பாளையம், கல்யாணசுந்தரம் வீதியைச் சோ்ந்த வெங்கடேஷ் (55) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் ரவிகுமாா், போலீஸாா் மோளகவுண்டம்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த வெங்கடேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், ஈரோடு நாடாா்மேடு, பழையகள்ளிவலசு பகுதியைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மூன்றரை பவுன் நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து வெங்கடேஷிடம் இருந்து ஐம்பொன் சிலையையும், மூன்றரை பவுன் நகையையும் போலீஸாா் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.