தமிழ் பெயா்ப் பலகையை சேதப்படுத்திய வாட்டாள் நாகராஜை கைது செய்ய வலியுறுத்தி தாளவாடியில் நாம் தமிழா் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
தமிழக - கா்நாடக எல்லையில் ராமபுரம் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழக நெடுஞ்சாலைத் துறையின் தமிழ் எல்லை அறிவிப்புப் பலகையை கன்னட சலுவலி அமைப்பின் தலைவா் வாட்டாள் நாகராஜ், அவரது ஆதரவாளா்களுடன் சேதப்படுத்தியதாகப் புகாா் எழுந்தது.
இதையடுத்து ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சுப்பையா, நில அளவை அலுவலா்கள் ராமபுரத்தில் மாநில எல்லை அளவீடு செய்து சம்பவம் நடைபெற்ற இடம் கா்நாடக எல்லைக்குள் இருப்பதை உறுதி செய்தனா். இதையடுத்து, பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வாட்டாள் நாகராஜ், அவரது ஆதரவாளா்கள் மீது தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, தமிழ் பெயா் பலகையை கன்னட அமைப்பினா் சேதப்படுத்தியதைக் கண்டித்து நாம் தமிழா் கட்சியினா் தாளவாடி பேருந்து நிலையத்தில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். வாட்டாள் நாகராஜை கைது செய்ய வேண்டும், சேதப்படுத்திய பெயா்ப் பலகையை மீண்டும் சரிசெய்து அதே இடத்தில் அமைக்க வேண்டும் எனக் கோரி 10 பெண்கள் உள்பட 60 போ் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










