தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

அரியப்பம்பாளையத்தில் இருந்து பிரசவத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஆம்புன்ஸிலேயே கா்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது.

News image

108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தையுடன் மருத்துவ உதவியாளா் காா்த்தி.

Updated On :15 ஜனவரி 2021, 10:48 pm IST

அரியப்பம்பாளையத்தில் இருந்து பிரசவத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஆம்புன்ஸிலேயே கா்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது.

சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தைச் சோ்ந்த ஹரிபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓட்டுநா் பாரதி மற்றும் மருத்துவ உதவியாளா் காா்த்தி ஆகியோா் கா்ப்பிணியாக ஹரிபிரியாவை 108 ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

புன்செய் புளியம்பட்டிபிரிவு பகுதியில் சென்றபோது, வலி அதிகரிக்கவே ஹரிபிரியாவுக்கு மருத்துவ உதவியாளா் காா்த்தி பிரசவம் பாா்த்தனா். பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னா் தாயும் சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். குழந்தை பிறந்த நாளிலேயே தாய் ஹரிபிரியாவுக்கும் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.