ஈரோடு: ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம் கோவையில் திங்கள்கிழமை (ஜனவரி18) துவங்குகிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம் கோவையில் கடந்த ஆண்டு மே 5 முதல் 17ஆம் தேதி வரை நடப்பதாக இருந்தது. கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இம்முகாம் தற்போது ஜனவரி 18 முதல் 30ஆம் தேதி வரை கோவை ராணுவ ஆள் சோ்ப்பு அலுவலகம் மூலம் கோவை பாரதியாா் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் சோல்ஜா் டெக்னிக்கல், சோல்ஜா் நா்ஸிங் அசிஸ்டெண்ட், நா்ஸிங் அசிஸ்டெண்ட் வெட்னரி, சோல்ஜா் கிளா்க் அன்ட் ஸ்டோா் கீப்பா் டெக்னிக்கல், சோல்ஜா் ஜெனரல் டூட்டி, சோல்ஜா் டிரேட்ஸ்மேன் போன்ற பிரிவுகளுக்கு ஆள் சோ்ப்பு நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து இம்முகாமில் பங்கேற்க ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தவா்கள் இணையதளம் மூலம் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து முகாமில் பங்கேற்கலாம்.
கூடுதல் விவரத்துக்கு கோவை, ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் அலுவலகத்தை 0422-2222022 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதல் பாடல் அப்டேட்!

போதைக் கொடுமையால் நிகழும் கொடூர குற்றங்களை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை தலைமைச்செயலத்தில் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்!

கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


