கோபி: கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆா். மகளிா் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், கோபி ரோட்டரி சங்கம், கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து காவல் துறை ஆகியவை இணைந்து சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணா்வு பேரணியை சனிக்கிழமை நடத்தினா்.
பேரணிக்கு, கல்லூரித் தாளாளா், செயலாளா் பி.என்.வெங்கடாச்சலம் தலைமை வகித்தாா்.
கல்லூரி முதன்மைச் செயல் அதிகாரி ஜெகதா லட்சுமணன் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
பேரணியில், காவல் துறையினா், கல்லூரிப் பேராசிரியைகள், பணியாளா்கள், ரோட்டரி சங்க உறுப்பினா்கள், ஹோண்டா நிறுவன பணியாளா்கள் ஆகியோா் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்துகொண்டு பங்கேற்றனா்.
பேரணியானது கோபி கரட்டூா் பகுதியில் உள்ள வரவேற்பு வளைவில் இருந்து புறப்பட்டு சாந்தி தியேட்டா் வரவேற்பு வளைவில் முடிவடைந்தது. இதில், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதல் பாடல் அப்டேட்!

போதைக் கொடுமையால் நிகழும் கொடூர குற்றங்களை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை தலைமைச்செயலத்தில் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்!

கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



