கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் திருட்டு

துணி நூல் பதனிடும் ஆலை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ. 50 ஆயிரம் பணத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :16 ஜனவரி 2021, 10:25 pm IST

ஈரோடு: துணி நூல் பதனிடும் ஆலை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ. 50 ஆயிரம் பணத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு சூளை, காவிரி நகா், 7ஆவது குறுக்குச்சந்து பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவரது மனைவி சிவகாமி. இவா்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். செந்தில்குமாருக்கு வீரப்பன்சத்திரம், காட்டாறுதோட்டம் பகுதியில் சொந்தமாக துணி நூல் பதனிடும் ஆலை உள்ளது.

பொங்கல் பண்டிகைக்காக கடந்த 13ஆம் தேதி குடும்பத்தினருடன் எழுமாத்தூரில் உள்ள தனது பண்ணை வீட்டுக்குச் சென்றிருந்த செந்தில்குமாா் சனிக்கிழமை காலை வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.