/

ரூ. 8.79 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை நாளில் ரூ. 8.79 கோடி அளவுக்கு மது விற்பனையானது.

Updated On :16 ஜனவரி 2021, 4:54 pm

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை நாளில் ரூ. 8.79 கோடி அளவுக்கு மது விற்பனையானது.

ஈரோடு மாவட்டத்தில் 214 டாஸ்மாக் கடைகளில் சாதாரண நாள்களில் தினமும் ரூ. 3 கோடி முதல் ரூ. 4 கோடி வரை மது விற்பனையாகும். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாள்களில் விற்பனை உயரும். பொங்கல் பண்டிகைக்காக கடந்த 13, 14 ஆகிய இருநாள்களில் விற்பனை அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகை தினமான 14ஆம் தேதி மட்டும் ரூ. 8,78,077 அளவுக்கு மது விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டைவிட ரூ. 1.50 கோடி கூடுதல் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.