மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம்

சிவதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பங்குனி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் அதிகாலை 5 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். ''தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.. நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க..'' என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம்
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com