பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர்களான கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முன்னணி வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் மெய்யழகன்.
சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
நாயகி ஸ்ரீதிவ்யா.
கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, இயக்குநர் பிரேம்குமார் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
நடிகர் கார்த்தியின் 27வது படமாக உருவாகியுள்ளது படம் மெய்யழகன்.
கிராமத்து கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள நிலையில், நகரத்திலிருந்து கிராமம் செல்லும் கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி என இருவரும் கிராமத்துக் கதையில் நடித்துள்ளனர்.