தமிழகத்தின் 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதியதாக உதயமாகும் ஆவடி மாநகராட்சியில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும் வரும். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் குடிநீர், கழிவுநீர் வடிகால், சாலை போன்றவைகளின் கட்டமைப்புகள் தரம் உயரும் அதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. ஆவடி வடசென்னை பகுதியில் வளர்ந்து வரும் மாநகராட்சியாக உள்ளது.