சென்னை தலைமைச் செயலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், கடலூர் மாவட்டம், மாலுமியர்பேட்டையைச் சார்ந்த சிறுமி ச.பவதாரணிக்கு பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதாக ரூ.1 லட்சம் காசோலையும் பாராட்டு பத்திரமும் வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சமூகநலத்துறை அமைச்சர் வி.சரோஜா உள்ளிட்ட அமைச்சர்கள்.