எல்விஎம் 3-எம்2 வகை ராக்கெட் ஆனது திட, திரவ மற்றும் கிரோயோஜெனிக் உள்ளிட்ட வகை எந்திரங்களால் இயக்கப்படும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இங்கிலாந்தின் 36 செயற்கைகோள்களுடன் எல்விஎம் 3- எம் 2 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.
இஸ்ரேவின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முறையில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
வர்த்தகரீதியாக முதல் முறையாக இந்திய ராக்கெட் அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணுக்கு சுமந்து சென்றது.
எல்விஎம் 3-எம்2 வகை ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது.
எல்விஎம் 3-எம்2 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.