முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.
கொழும்புபில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் 27-வது லீக் போட்டி, குரூப் ஏ-யில் இடம்பெற்றுள்ள சூரியகுமார் தலைமையிலான இந்தியா, சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதின.
போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 27 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.ANI
கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.ANI
ஆட்டத்தின் இறுதியில் ஷிவம் துபே 17 பந்துகளில் 27 ரன்களும், ரிங்கு சிங் 4 பந்துகளில் 11 ரன்களும் எடுத்தனர்.ANI
போட்டியை காண பிரேமதாசா மைதானத்தில் குவிந்த ரசிகர்கள்.ANI