3.4.1976: காப்பியடித்து பட்டம் பெற்ற மாணவனின் கண்ணீர் கடிதம்!
காப்பியடித்து பட்டம் பெற்ற மாணவனின் கண்ணீர் கடிதம்...

3.4.1976
DNS

3.4.1976
DNS
ஆமதாபாத், ஏப், 1- பரீட்சையில் காப்பியடித்து தேர்ச்சி பெற்றது தனக்கு பலனளிக்கவில்லை என்று பி.காம் பட்டதாரி ஒருவர் குஜராத் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தான் செய்த குற்றத்தை உணர்ந்து கடிதம் எழுதியுள்ளார்.
4 ஆண்டுகளும் காப்பியடித்தே நான் பி.காம் பரீட்சைகளில் தேர்ச்சி பெற்றேன். நான் ஒருபோதும் படித்தது கிடையாது. பரீட்சைக்கு செல்லும் போது, கையில் ஏற்கனவே எழுதிய விடைத்தாள்களை எடுத்துச் சென்றேன். இப்போது எனக்கு வேலையும் கிடைக்கவில்லை. வேலைக்கு ஆட்களை எடுப்பவர்கள் நடத்தும் போட்டிகளில் படித்துப் பட்டம் பெறாத நான் தோல்வியை யடைந்து வருகையில் எனக்கு எப்படி வேலை கிடைக்கும்? எனக்கு ஏதாவது தெரிந்தால்தானே" என்று குஜாரத் துணை வேந்தர் ஈஸ்வர்பாய் படேலுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
மாணவர் யாரும் காப்பியடிக்க முடியாமல் கடும் நடவடிக்கைகள் எடுக்கும்படியும் துணை வேந்தரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவை, ஏப், 1 - கோவை மத்திய சிறையில் சுடந்த 18ந் தேதி கந்தசாமி என்ற பொன்னுசாமிக்கு மரண தண்டனை நிறைவேறியது.
1972 செப்டம்பர் 15ந் தேதி இரளில் ஒட்டப்பாளையம் கிராமத்தில் ராமசாமி கவுண்டர், அவரது மனைவி இளையம்மாள், பேரன் ஆகியோரை கொலை செய்ததாக எதிரி பொன்னுசாமிக்கு ஈரோடு செஷன்ஸ் நீதிபதி மரண தண்டனை விதித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...