நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

9.1.1976: “7 சுதந்திரங்களை” வலியுறுத்த கோர்ட் ஏற தடை - ராஷ்டிரபதி உத்தரவு

7 சுதந்திரங்களை வலியுறுத்த கோர்ட் ஏற ராஷ்டிரபதி தடை விதித்திருப்பது பற்றி...

News image

9.1.1976

Updated On :8 ஜனவரி 2026, 2:07 pm IST

புதுடில்லி, ஜன. 8 - அரசியல் சட்டத்தின் 19வது ஷரத்தில் உத்தரவாதம் தரப்பட்டுள்ள “7 சுதந்திரங்களை” வலியுறுத்த கோர்ட்டுக்குச் செல்லும் உரிமையை அவசர நிலைமைக் காலத்தில் நிறுத்திவைத்து ராஷ்டிரபதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசியல் சட்டத்தின் 19-வது ஷரத்தினால் உத்தரவாதம் தரப்பட்டுள்ள “7 சுதந்திரங்கள்” வருமாறு:-

(1) பேச்சு, எழுத்து சுதந்திரம்.

(2) ஆயுதங்களின்றி அமைதியாக கூட்டம் கூடும் உரிமை.

(3) சங்கங்கள், யூனியன்கள் அமைக்கும் உரிமை.

(4) இந்திய பிரதேசத்தில் தாராளமாக நடமாடும் உரிமை.

(5) இந்திய பிரதேசத்தில் எப்பகுதியிலும் தங்கி வசிக்கும் உரிமை.

(6) சொத்துக்களை வாங்க, விற்க, வைத்திருக்க உரிமை.

(7) தொழில், வர்த்தகம், ஜீவனோபாயம் நடத்தும் உரிமை.

அரசியல் சட்டத்தின் 14, 21, 22வது ஷரத்துகள் உத்தரவாதம் தந்துள்ள உரிமைகளை அவசர நிலைமை காலத்துக்கு நிறுத்திவைத்து கடந்த ஆண்டு ஜூன் 27 (ஆம் தேதி) ராஷ்டிரபதி உத்தரவு பிறப்பித்தார்.

இன்று ராஷ்டிரபதி பிறப்பித்த உத்தரவின் சாராம்சம் வருமாறு:

“அரசியல் சட்டத்தின் 19வது ஷரத்து உத்தரவாதமளிக்கும் உரிமைகளை வலியுறுத்த எந்த நபரும் கோர்ட் ஏறுவதற்கு உள்ள உரிமையும், மேற்குறித்த உரிமைகளை வலியுறுத்த கோர்ட்டில் உள்ள நடவடிக்கைகளும் அரசியல் சட்டத்தின் 352(1) ஷரத்துப்படி 1971 டிசம்பர் 3 (ஆம் தேதி) மற்றும் 1975, ஜூன் 25 (ஆம் தேதி) பிராகடனமான அவசர நிலைமை அமலில் உள்ள காலத்துக்கு நிறுத்திவைக்கப்பட, அரசியல் சட்டத்தின் 359(1) ஷரத்து அளிக்கும் அதிகாரத்தைச் செலுத்துவதன் மூலம், ராஷ்டிரபதி இதன்மூலம் உத்தரவு பிறப்பிக்கிறார்.

இந்த உத்தாரவு இந்திய பிரதேச முழுதிலும் செல்லுபடியாகும்”.

Summary

9.1.1976: Ban on approaching the court to demand the “seven freedoms” - President's order

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.