திருச்சி, ஜூலை. 16 - தற்காலிக உத்தியோகங்களுக்கு அவசியமான சர்வீஸ் விதிகளை வகுக்காமல் அவற்றை நிரந்தரமாக வைத்துக் கொள்வது ஒழுங்கற்றது என்று இலாகாக்களின் தலைமை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது.
சர்வீஸ் விதிகள் வகுக்கப்பட்டுள்ள தற்காலிக உத்தியோகங்களை மட்டும் நிரந்தரமாக வைத்துக் கொள்ள பிரேரணைகளை அரசாங்கத்திற்கு இலாகாக்களின் தலைமை அதிகாரிகள் - அனுப்ப வேண்டும். பிரேரணைகளை அனுப்புகின்றபோது பிரேரணைகளில் இடம்பெறும் தற்காலிக உத்தியோகங்கள் அனைத்துக்கும் சர்வீஸ் விதிகள் உள்ளனவா என்பதை இலாகாக்களின் தலைமை அதிகாரிகள் தெரிவிக்கவேண்டும்.
ஒரு தற்காலிக உத்தியோகம் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து இருந்து வந்திருந்தால், குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதாக அந்த உத்தியோகம் இருக்கும் பட்சத்தில், அதை நிரந்தரமாக்கலாம் என்று 4-11-1963 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.
சர்வீஸ் விதிகள் இல்லாதிருந்தும், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இருந்த தற்காலிக உத்தியோகங்கள் நிரந்தரமாக்கப்பட்டுவிட்ட உதாரணங்கள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. எனவே தற்காலிக உத்தியோகங்களுக்கு அவசியமான சர்வீஸ் விதிகளை வகுக்காமல் அவற்றை நிரந்தர உத்தியோகங்களாக ஆக்குவது ஒழுங்கற்றது என்று இலாகாக்களின் தலைமை அதிகாரிகளுக்குக் கூறப்பட்டிருக்கிறது.
பணியில் இருக்கும் தொழிலாளர் குடும்பம் புது உதவி பெறும்
புது டில்லி, ஜூலை. 17- ஊழியர்கள் பிராவிடண்ட் நிதி, நிலக்கரிச் சுரங்கங்கள் பிராவிடண்ட் நிதி ஆகிய திட்டங்களின் கீழ் உள்ள தொழிலாளர்களில் எவரேனும் பணியில் இருக்கும் காலத்தில் இறந்து விட்டால், அவருடைய குடும்பத்தாருக்கு அதிகபட்சம் ரூ. 10 000 வரையில் கூடுதலாக ஒரு தொகை வழங்க வகை செய்யும் ஒரு அவசரச் சட்டத்தை ராஷ்டிரபதி இன்று பிரகடனம் செய்தார்.
1976-ம் வருடத்திய தொழிலாளர் பிராவிடண்ட் நிதிச் சட்டங்கள் திருத்த அவசரச் சட்டம் என்று இந்த சட்டத்திற்குப் பெயர்.
தொழிலாளர்களுக்கென, டிபாசிட்டுடன் தொடர்புபடுத்தப்பட்ட இன்ஷுரன்ஸ் திட்டத்தை அரசாங்கம் இன்று அறிவித்தது. அந்தத் திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் புதிய பயனை அடைவார்கள்.
84 லட்சம் பேர் பயனடைவர்
ஊழியர்கள் பிராவிடண்ட் நிதித் திட்டத்தின் கீழுள்ள 78 லட்சம் தொழிலாளர்களும், நிலக்கரிச் சுரங்கங்கள் பிராவிரண்ட் நிதித் திட்டத்தின் கீழுள்ள 6.2 லட்சம் தொழிலாளர்களும், ஆக மொத்தம் 84.02 லட்சம் தொழிலாளர்கள் இந்தப் புதிய திட்டத்தினால் பலன் அடை வார்கள். ...
Summary
18.7.1976: Matter of regularizing temporary posts: New order by the Tamil Nadu Government.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திர கடலில் தமிழக மீனவா்கள் தடையின்றி மீன்பிடிக்க நடவடிக்கை : தமிழக அரசு

தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள்! எந்தெந்த கல்லூரிகளில்?

10.7.1976: அரசு தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க தேர்வு?
இயற்கை வளங்களை தனியாருக்கு தாரைவாா்க்க தமிழக அரசு முயற்சி: சீமான் குற்றச்சாட்டு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |




