இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

25.3.1976: திருமண வயதை உயர்த்த பரிசீலனை - இந்திரா காந்தி

திருமண வயதை உயர்த்த பரிசீலனை செய்வதாக பிரதம மந்திரி இந்திரா காந்தி தெரிவித்தது பற்றி...

News image

25.3.1976

Updated On :24 மார்ச் 2026, 10:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுடில்லி, மார்ச். 23 - திருமண வயதைப் பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் உயர்த்துவது பற்றி சர்க்கார் சிந்தித்து வருகிறது என்று பிரதம மந்திரி இந்திரா காந்தி கூறினார்.

குடும்பக் கட்டுப்பாடு பற்றி ஸ்வீடன் நாட்டு பத்திரிகை ஆசிரியர் திருமதி லிட்டில் பிஷர் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். உடனடியாகப் பலன் கிடைக்கும் பொருட்டு தூண்டுதலுடன் ஓரளவு நிர்ப்பந்தத்தையும் பிரயோகிப்பது பற்றிப் பரிசீலிப்பதாக பிரதம மந்திரி குறிப்பிட்டார்.

நகர்ப்புறங்களிலும், தொழில் வளர்ச்சியடைந்த பகுதிகளிலும் சமூக நிர்ப்பந்தங்கள் காரணமாக காலம் தாழ்த்திய திருமணங்கள் நடப்பதாகவும், ஆனால் பின்தங்கிய பகுதிகளில் சமூக சீர்திருத் தச் சட்டத்தை அமலாக்குவது கடினமாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.

புதுடில்லி, மார்ச், 24 - 1976-77 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று லோக்சபையில் நிறைவேறியது. ஓராண்டில் ரூ. 2 கோடி அளவுக்கு வருவாயை இழக்கக் கூடிய வரிச் சலுகைகளை நிதி மந்திரி சி. சுப்ரமண்யம் அறிவித்தார்.

விவாதத்துக்கு பதிலளிக்கையில், நிதி மந்திரி சுப்ரமணியம் அறிவிக்கப்பட்ட சலுகைகள் கணிசமானதென்று கூறினார். தமிழ்நாட்டின் நிதி நிலவரத்தையும், ரூ. 200 கோடிக்கு அதிகரிக்கப்பட்ட திட்ட முதலீட்டுக்கான நிதி வசதிகளை காண வேண்டிய கட்டாய நிலை இருப்பதையும் கருதி வரிச் சலுகைகள் பெருந் தொகையாகும் என்று சுப்ரமணியம் கூறினார்:

வரிச் சலுகைகள் விவரம்

1. வெளியூர் சர்வீஸ் மோட்டார் வண்டிகள் வரி குறைக்கப்படும். கால் வருஷத்துக்கு ஆசனம் ஒன்றுக்கு ரூ. 225 தீர்வை உத்தேசிக்கப்பட்டிருந்தது, இத்தீர்வை கால்ஆண்டுக்கு ஆசனம் ஒன்றுக்கு ரூ. 215 ஆக்கப்படுகிறது.

2. திராட்சை, கரும்பு, தோட்டங்கள் (தேயிலை, காப்பி, ரப்பர் போன்றவை) வெற்றிலை, மஞ்சள் உத்தேச தீர்வை ஏக்கருக்கு ரூ. 25 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது இப்போது ஏக்கருக்கு ரூ. 20 ஆகிறது.

3. புகையிலை, மிளகாய், பாசன வசதியுள்ள நிலங்களில் பயிரான பருத்தி, பாசன வசதியுள்ள நிலங்களில் பயிரான வேர்க்கடலை முதலிய ரொக்கப் பயிர்களுக்கு "செஸ்" தீர்வை ஏக்கருக்கு ரூ. 15 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அது குறைக்கப்பட்டு ஏக்கருக்கு ரூ. 12.5 ஆகிறது.

இந்த சலுகைகளின் மூலம் ஆண்டொன்றுக்கு ரூ. 2 கோடி வருமானத்தை இழக்க வேண்டியிருக்குமென்றும், இக் கணிசமான சலுகைகளை மெம்பர்கள் வரவேற்பார்கள் என்று நம்புவதாகவும் நிதி மந்திரி சுப்ரமண்யம் கூறினார். ...

Summary

Prime Minister Indira Gandhi stated that the government is considering raising the marriage age to 18 for women and 21 for men.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.