கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

24.3.1976: இந்தியா - இலங்கை கடல் எல்லை வரையறுப்பு உடன்பாடு கையொப்பம்

இந்தியா - இலங்கை கடல் எல்லை வரையறுப்பு உடன்பாடு கையொப்பம்...

News image

24.3.1976

Updated On :23 மார்ச் 2026, 10:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுடில்லி, மார்ச்: 23 - இந்தியா, ஸ்ரீலங்கா இடையே கடல் எல்லையை வரையறுக்கும் வரலாற்றுச் சிறப்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் இன்று கையொப்பமிட்டன.

வட்கே குடாவில் மீன் பிடித்தல் பற்றியும் இரு நாடுகளும் உடன்பாடு கண்டன.

அயல்நாட்டு இலாகாக் காரியதரிசி கேவல் சிங்கும், ஸ்ரீலங்கா அயல்நாட்டு இலாகாக் காரியதரிசி ஜயசிங்கேயும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அது இரு அண்டை நாடுகளின் வரலாற்றில் சிறப்பான நிகழ்ச்சி என வர்ணிக்கப்பட்டது. வங்க குடாவிலும், மன்னார் குடாவிலும் எல்லை வரையறுக்கப்பட்டது.

இரு கடல் சார்பு நாடுகள் இடையே கடல் எல்லை வரையறுப்பு பற்றிய ஒப்பந்தம் முதல் தடவையாக இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் பற்றிய விவதங்கள் இன்று வெளியிடப்படவில்லை. அநேகமாக புதன்கிழமை அன்று பார்லிமெண்டில் தாக்கல் செய்ப்படலாம்.

இருநாடுகளும் 200 மைல் தூர பொருளாதார கடல் மண்டலங்களை அடிப்படையாகக் கொண்டு அதே நேரத்தில் இவ்விதம் எல்லை வரையறுக்க முடியாத இடங்களில் இரு நாடுகளின் கரைகளிலிருந்தான நடுக்கோட்டை அடிப்படையாகக் கொண்டு கடல் எல்லைகளை நிர்ணயித்துக்கொண்டுள்ளன.

பாக் ஜலசந்தியைப் பொறுத்தமட்டில் இருநாடுகளுக்கும் இடையே 1974 ஜூன் மாதத்திலேயே ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தப்படி கச்சத்தீவு ஸ்ரீலங்காவுக்குக் கிடைத்தது.

இன்று கையெழுத்தான இரு ஒப்பந்தங்களும் இந்தியா - ஸ்ரீலங்கா இடையே சுமார் மூன்றரை ஆண்டுகளாக நடந்த பேச்சு வார்த்தைகளின் பலனாக ஏற்பட்டவையாகும்.

புதுடில்லி, மார்ச்: 23 - விலைகள் ஸ்திரமடைந்து விட்டன. ஆகையால், மத்திய அரசு, மாநில அரசு, அரசுத் தொழில் துறை ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் தருவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்யும் என்று மத்திய நிதி மந்திரி சி. சுப்ரமணியம் இன்று ராஜ்ய சபையில் கூறினார்.

பண வீக்கத்தை எதிர்த்து அரசாங்கம் கடுமையாகப் போராடி வந்த சமயத்தில் தேசிய ஊதியக் கொள்கை பற்றிச் சிந்திக்க அரசுக்கு நேரமில்லாது போய்விட்டது என்றும் அவர் சொன்னார்.

பஞ்சப்படிகள் மாறுபடுவதால் தான் ஊதிய அமைப்பில் அத்தனை மாறுபாடுகள் இருக்கின்றன, ஒரே தொழிலில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஊதிய ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் அரசு பார்த்துக் கொள்ளும். அரசுத் தொழில்களுக்கும் அரசாங்க இலாகாக்களுக்கும் ஊழியர்களின் இடையே ஊதியங்களில் வித்தியாசங்கள் இல்லாமலும் அரசு பார்த்துக் கொள்ளும் என்று உதவி நிதி மந்திரி சுசீலா ரோஹடகி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.