வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அரசு மருத்துவமனையில் டெங்கு கொசு ஒழிப்பு முகாம்

அரக்கோணம் நகராட்சி சார்பில் அரக்கோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2016, 9:05 am

DIN

அரக்கோணம் நகராட்சி சார்பில் அரக்கோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தில் கடந்த சில நாள்களாக டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ஆங்காங்கே தென்பட்ட நிலையில், நகரில் அரக்கோணம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பல இடங்களில் தொடர்ந்து ஒரு வாரமாக டெங்கு காய்ச்சல் வராத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக அரக்கோணம் அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆணையர் செளந்தரராஜன் தலைமையில் நகராட்சி சுகாதார அலுவலர் சுருளிராஜன் மற்றும் 40-க்கும் மேற்பட்ட டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் மருத்துவமனை வளாகத்தின் அனைத்து வார்டுகள், கழிப்பறைகள், வளாகத்தில் போட்டு வைக்கப்பட்டிருந்த உபயோகப்படுத்தப்படாத பொருள்களை அகற்றினர்.

மேலும் நகராட்சி வளாகம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.