சர்க்கரை, அறுசுவைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சுவையான இனிப்பு சுவையை கொண்டது. இனிப்பாக எந்த உணவைப் பார்த்தாலும் பார்ப்பவரின் கண்களை கவர்ந்து வாயில் நீர் சுரக்க செய்யும் சக்தி இதற்கு உண்டு. நம் அன்றாட வாழ்வில் நாள் ஒன்றிக்கு நாம் 40 டீஸ்பூன்களுக்கும் அதிகமான சர்க்கரையை சாப்பிடுகிறோம் என்கிறது ஒரு ஆராய்ச்சி முடிவு.
சர்க்கரை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய சீர்கேடுகள் இருக்கிறது என்று தெரிந்தும், வெகு சிலரால் மட்டும் நாவை அடக்கி சர்க்கரையை தங்கள் வாழ்வில் இருந்து நீக்க முடிகிறது. அதுவும் படிப்படியாகத்தான். சர்க்கரை என்பது ஐஸ் கிரீம், கூள் டிரிங்ஸ் போன்றவற்றில் இறுக்கு சர்க்கரையையும் சேர்த்துத் தான். ஒருவேளை நாம் சர்க்கரை சாப்பிடுவதையே நிறுத்திவிட்டால் என்னவாகும் என்று யோசித்தது உண்டா? அப்படி நிறுத்தினால் நமது உடலில் எந்த மாதிரியான மாற்றங்கள் எல்லாம் ஏற்படும் என்று தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.
முதல் நாள்: சாதாரண விஷயங்களுக்கு கோவப்படுவது போன்ற திடீர் மனநிலை மாற்றங்கள் (Mood swings) ஏற்படுவது குறையும். உங்களின் செரிமான சக்தி அதிகரிக்கும்.
மூன்றாவது நாள்: உங்கள் உடலின் சக்தி அதிகரித்து சுறு சுறுப்புடன் இருப்பதைப் போல் உணர்வீர்கள். மேலும் உடலின் பலமும் பன்மடங்கு அதிகரித்து இருக்கும்.
ஏழாவது நாள்: இரவில் நல்ல தூக்கம் வரும். நடு ராத்திரியில் எழுந்திருப்பது போன்ற எந்த ஒரு இடையூறும் இல்லாமல் தூங்குவீர்கள். அதனால் காலையில் எந்தவித சோர்வும் இல்லாமல் படுக்கையைவிட்டு இறங்குவீர்கள்.
பத்தாவது நாள்: உங்களது உடல் எடை 1-2 கிலோ வரை குறையும். ரத்த அழுத்தமும் சீராக மாறி இருக்கும்.
முப்பதாவது நாள்: உங்களுடைய முகர்தல் உணர்ச்சி மற்றும் சுவை உணர்ச்சி அதிகரித்து இருக்கும். சரியாக ருசி பார்ப்பது மற்றும் நறுமணத்தை வைத்தே பொருள் என்னவென்று யூகிப்பது போன்ற திறன்கள் வளர்ந்திருக்கும்.

முப்பத்தைந்தாவது நாள்: முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவடைந்திருக்கும்.
ஒரு வருடத்தில்: உடலில் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி அழகான உடல் தோற்றத்தை பெற்றிருப்பீர்கள். மேலும் உங்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உங்களது மூளையின் செயல்பாடும் அதிகரிக்கும். எப்போதும் எச்சரிக்கையாக மிகவும் துடிப்புடன் இருப்பீர்கள்.
இதை நினைவில் கொள்ளுங்கள்: ஆரம்பத்தில் சர்க்கரையை விடுவது என்பது சுவையே இல்லாத ஒரு வாழ்க்கைக்குள் செல்வதை போல் உங்களுக்குத் தோன்றும், ஆனால் இவை அனைத்தும் உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு என்று நம்புங்கள். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 25 கிராமை விட அதிகமான சர்க்கரை எடுத்துக் கொள்வது இல்லை என்று முடிவு செய்யுங்கள். பின்னர் படி படியாக உங்களை நீங்களே எளிதாக கட்டுப் படுத்திக் கொள்ள முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



