உங்கள் பாதத்தின் அழகைக் கெடுக்கும் பித்த வெடிப்பை காணாமல் ஆக்க இதையெல்லாம் உடனே செய்யுங்கள்!

பொதுவாக நாம் முகத்தை பராமரிப்பதைப் போன்று பாதங்களை பராமரிப்பதில்லை.
உங்கள் பாதத்தின் அழகைக் கெடுக்கும் பித்த வெடிப்பை காணாமல் ஆக்க இதையெல்லாம் உடனே செய்யுங்கள்!

பொதுவாக நாம் முகத்தை பராமரிப்பதைப் போன்று பாதங்களை பராமரிப்பதில்லை. இதனால், பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு முகத்தின் அழகை பாதம் கெடுக்கிறது. அப்படியில்லாமல், வாரம் ஒருமுறை பாதங்களை கவனித்தால் மென்மையானப் பாதங்களைப் பெறலாம்.

மருதாணி இலைகள்: அந்தக் காலத்தில், ஒவ்வொரு வீட்டிலும் மருதாணி செடி இருக்கும். வாரம் ஒருமுறை அவற்றை பறித்து மைய அரைத்து கை, கால்களில் இட்டு அழகுப் படுத்துவார்கள். அதனால் பாதங்கள் நோய் தாக்குவதில் இருந்து பாதுகாக்கப்பட்டது.

மருத்துவ குணமுள்ள மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் நாளடைவில் பித்த வெடிப்பு மறைந்து பாதங்கள் அழகாக காட்சி அளிக்கும்.

மஞ்சளும், வேம்பும்: பாதங்களை பாதுகாப்பதில் மஞ்சளும், வேம்பும் மிக முக்கியமானவை. வேப்பிலையைப் பறித்து அதனுடன் மஞ்சள் மற்றும் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்கவேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

எண்ணெய்: விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

வேப்ப எண்ணெய்யில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

எலுமிச்சை: சுடுநீர், எலுமிச்சை, பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் இறந்துபோன செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகும்.

தேங்காய் எண்ணெய்: இரவு நேரத்தில் உறங்கப் போகும் முன் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய்யைத் தடவிக்கொண்டு தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

தரமான காலணிகள்: தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்தினாலும் சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானதை பார்த்து கவனித்து வாங்குவது நல்லது.

குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com