கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தொப்பை குறைந்து உடல் இளமையாக உதவுகிறது இந்த ரசம்!

பெண்களுக்கு பிரசவத்திற்குப் பின்பு உண்டாகும் தொப்பையை குறைக்க உதவுகிறது கொள்ளு ரசம்

News image
Updated On :12 மார்ச் 2019, 5:22 am

கோவை பாலா

பெண்களுக்கு பிரசவத்திற்குப் பின்பு உண்டாகும் தொப்பையை குறைக்க உதவுகிறது கொள்ளு ரசம். இதை தயாரிக்க தேவையான பொருட்கள்:
 
கொள்ளு - 100 கிராம் 
மிளகு - 10 கிராம் 
பூண்டு - 10 பல் 
சீரகம் - அரை ஸ்பூன் 
இஞ்சி - 10 கிராம் 
மல்லி இலை - ஒரு கைப்பிடி 
உப்பு, மஞ்சள் - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை : முதலில் கொள்ளை சுத்தப்படுத்தி ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் புளியை சேர்த்து கரைத்து அதிலுள்ள  திப்பியை நீக்கிக் கொள்ளவும். மிளகு, பூண்டு, சீரகம், இஞ்சி, மிளகு, மல்லி இலை ஆகியவற்றை ஒன்றிரண்டாக அரைத்து எண்ணெய் விட்டு வதக்கி அதனுடன் கொள்ளு புளி கரைசலை சேர்த்து சூடு செய்யவும். நுரை வரும் சமயத்தில் இறக்கி வைத்து விட வேண்டும்.

பயன்கள் : இந்த ரசம் உடம்பில் உள்ள தேவையற்ற சதைகளை குறைக்கவும், பிரசவத்திற்கு பின்பு உண்டாகும் தொப்பையை கரைத்து எப்பொழுதும் இளமையாக இருக்க உதவும் ரசம் இந்த கொள்ளு ரசம். இதனை தினமும் உணவில் சேர்த்து அல்லது தயார் செய்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் குடித்து வந்தால் மேற்கூறிய பலனை பெறலாம். 

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.